கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திரும்பிய திசை எங்கும் சிறகடித்து பறந்து கொண்டிருந்த குருவிகள் இன்று மனிதரை விட்டு விலகிச் சென்றது ஏன். யாருக்கும் சிறு தீங்கும் இழைக்காத அந்த சின்னஞ்சிறிய ஜீவன், ஏதேதோ காரணங்களுக்காக வேட்டையாடப்படுவது காலகாலமாக நடக்கிறது. சமீப வருடங்களில் அவை அழிவின் விளிம்புக்கே துரத்தப்பட்டிருப்பதுதான் பெருங்கொடுமை!