தமிழக காவல் துறையின் சார்பு ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும
தமிழக காவல் துறையின் சார்பு ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு


தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் கடந்த மாதம் வியாழக்கிழமை(நவ.1) வெளியிடப்பட்டது. 

தமிழக காவல்துறையில் உள்ள 309 சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, 6 மையங்களில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வின் முடிவு www.tnusrbonline.org  என்ற இணையத்தளத்தில் கடந்த மாதம் வியாழக்கிழமை(நவ.1) வெளியிடப்பட்டது. 

இதில் தகுதி மதிப்பெண்கள், அடுத்தக்கட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்கு தகுதி பெற்ற 899 பேரின் சேர்க்கை எண்கள் வெளியிடப்பட்டன. 

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நேர்முகத்தேர்வின் முடிவில் 309 பேருக்கு மருத்துவ சோதனை மற்றும் காவல் விசாரணைக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சேர்க்கை எண்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com