டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்வு: சுந்தரம் பிஎன்பி பரிபா

வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் மற்றும் பிஎன்பி பரிபா பெர்ஷனல் பைனான்ஸ் இடையிலான கூட்டு நிறுவனமான சுந்தரம் பிஎன்பி பரிபா டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்வு: சுந்தரம் பிஎன்பி பரிபா

வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் மற்றும் பிஎன்பி பரிபா பெர்ஷனல் பைனான்ஸ் இடையிலான கூட்டு நிறுவனமான சுந்தரம் பிஎன்பி பரிபா டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
 இதுகுறித்து சுந்தரம் பிஎன்பி பரிபா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
 மூத்த குடிமக்களின் 12 மற்றும் 18 மாத டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று 24 மற்றும் 36 மாதங்கள் டெபாசிட்டுகளுக்கான வட்டி 8.25 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 மேலும், தனிநபர் 12 மற்றும் 18 மாதங்கள் மேற்கொள்ளும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 அதேபோன்று 24 மற்றும் 36 மாதங்கள் டெபாசிட்டிற்கான வட்டி 7.75 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என சுந்தரம் பிஎன்பி பரிபா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com