தரமிகுந்த இரு சக்கர வாகன உற்பத்தியில் அதிகம் கவனம் செலுத்தவுள்ளதாக டிவிஎஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் கூறியது:
2013-ஆம் ஆண்டில் டிவிஎஸ் குழுமமும், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனமும் 500 சிசி பிரிவில் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதன்படி தற்போது பிஎம்டபிள்யூ 310 சிசி பிரிவு வாகனப் பிரிவில் 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்து புதிய இலக்கை எட்டியுள்ளோம்.
500 சிசி-க்கும் குறைவான ஆற்றல் கொண்ட இருசக்கர வாகனப் பிரிவில் தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே எங்களது உறுதிப்பாடு. இதில் அதிக கவனம் செலுத்துவோம் என்றார்.