இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுப்பார் என்ற நிலைப்பாட்டல் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கு முதலீட்டை மேற்கொண்டனர்.
இதனிடையே, அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு உயர்வு, ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளும் முதலீட்டாளர்களின் மன நிலையில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தின.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் அதிகரித்து 35,929 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 10,791 புள்ளிகளில் நிலைத்தது.