லக்னெளவிலிருந்து ஈராக்குக்கு நேரடி விமானப் போக்குரவத்து சேவையைத் தொடங்க ஏர் இந்தியா பரிசீலித்து வருகிறது.
இதுறித்து நிறுவன வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவிலிருந்து, இராக்கின் நஜஃப் நகருக்கு விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அந்த விமானம், வழியில் தில்லியில் நின்று செல்லவும் திட்டமிடப்படுகிறது.
இராக்கின் நஜஃப் நகரம், ஷியா பிரிவு முஸ்லிம்களின் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. லக்னெளவிலும் கணிசமான எண்ணிக்கையில் ஷியா பிரிவினர் இருப்பதால், அவர்கள் அந்த நகருக்குச் செல்வதற்கு வசதியாக இரு நகரங்களுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, இது தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.