சென்னையில் ஐயப்ப குரு ஸ்வாமிகள் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 16 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
தர்ம ரக்ஷண ஸமிதி மற்றும் ஸ்ரீ ஐயப்ப பக்த சபா (மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில்) இணைந்து கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் ஐயப்ப குரு ஸ்வாமிகளின் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
முன்னதாக, மாலை 3 மணிக்கு நாம ஜெப கோஷ யாத்திரை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இருந்து ஊர்வலமாக மீனாட்சி மகளிர் கல்லூரி சென்றடையும்.
பந்தளம் அரண்மனை ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஜி.சசிகுமார் வர்மா, சபரிமலை தலைமை பூஜாரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ தந்திரி, ஆந்திரம் ஸ்ரீ பீடத்தின் நிறுவனர் பூஜ்யஸ்ரீ பரிபூர்ணானந்த சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். தர்ம ரக்ஷண ஸமிதி துணைத் தலைவரும் துக்ளக் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். நடிகை ஊர்வசி சாரதா, திரைப்பட நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்கின்றனர்.